-
16th August 2009, 11:42 PM
#1
Moderator
Diamond Hubber
நெஞ்சம் மறப்பதில்லை
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `நெஞ்சம் மறப்பதில்லை' இசை நிகழ்ச்சி, பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
காலத்தால் அழியாத தமிழ் திரை இசைப் பாடகர்களின் மறக்க முடியாத பழைய பாடல்களை அதன் தரம் குறையாமல் இன்றைய தொழில் நுட்பத்தோடும் பழைய பாடகர்களின் அதே குரல் வளத்துடன் இன்றைய பாடகர்களின் குரலில் பதிவு செய்து வழங்கி வருகிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் இந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சி பற்றி அதன் தயாரிப்பாளர் பால் டி.ராஜா கூறுகையில், ``இன்றைய தமிழ் இசை ரசிகர்களை அன்றைய பழைய பாடல்களின் உன்னத நாட்களுக்குகொண்டு சென்று மகிழ்விக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த நிகழ்ச்சி. இதற்கு ரசிகர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலானது'' என்று குறிப்பிட்டார்.
லிபர்ட்டி மீடியாவின் இணை தயாரிப்பாளர் சுப்புலெட்சுமி முருகானந்தம் கூறும் போது ``எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி, கண்டசாலா போன்ற பழம்பெரும் பாடகர்களின் குரலுக்கு இணையாக அதே போன்ற குரல்வளம் கொண்ட பாடகர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் ஆச்சரியப்படும் விதமாக, சங்கீதம் முறையாக பயின்று நல்ல குரலில் பாடக்கூடிய பல பாடகர்கள் கிடைத்தது எங்களது பாக்கியம். எங்களது இசைக் குழு இசையமைப்பாளர் ஆர்.கே.சுந்தர், எஸ்.கணபதி இருவரும் திறமையோடு இந்த நிகழ்ச்சியை உலகத்தரமாக வழங்குவதில் உறுதுணையாக இருக்கிறார்கள்'' என்றார்.
இனி வரும் வாரங்களில் ரசிகர்களை இன்னும் மகிழ்விக்க புதிய பாடகர்களை அறிமுகம் செய்வதும், பார்வையாளர்களே பாடகர்களின் குரல்வளத்தை எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு செய்யும் போட்டியும் இடம் பெற இருக்கிறது. தயாரிப்பு: லிபர்ட்டி மீடியா எண்டர்டெய்மெண்ட்.
நன்றி: தினதந்தி
-
16th August 2009 11:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks