Marupadiyum muthalla iruntha
:frightened: :skull:
Printable View
ஹாரிஸூக்கு படங்கள் கிடைக்க இதுதான் காரணமா?
இந்தஆண்டு வெளியான என்னைஅறிந்தால், அனேகன், நண்பேன்டா ஆகிய மூன்று படங்களுக்கு ஹாரிஸ்ஜெயராஜ்தான் இசை. அந்தப்படங்களுக்கு அடுத்து, உதயநிதியின் கெத்து படத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டிருந்தார் இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ். அதுவும் முன்பே செய்த ஒப்பந்தம் என்பதால் அவர் வசம் இருந்ததென்று சொல்லப்பட்டது. அதன்பின்னர் வேறு எந்தப்படமும் அவரிடம் இல்லை.
அவருடைய இந்தஆண்டுப்படங்களில் அவர் பாடல்களுக்குச் சிக்கல் இல்லை என்றாலும் படங்கள் பெரிதாகப் போகாதது அவரையும் பாதித்திருக்கிறது என்று சொல்லப்பட்டது. மற்றொன்று அவருடைய சம்பளம். அவர் சுமார் மூன்றுகோடி சம்பளம் வாங்குகிறார் என்று சொன்னார்கள். அவ்வளவு சம்பளம் கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை என்பதால் அவர் பக்கம் யாரும் போகவில்லை என்று சொன்னார்கள்.
ஆனால் மிகஅண்மையில் அவர் மூன்று பெரியபடங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் புதியபடம், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சிங்கம் 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடம் ஆகியனவற்றில் அவர் இசையமைப்பதாகச் சொல்லப்படுகிறது.
இம்மூன்று படங்களும் அவருக்குக் கிடைக்க முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறதாம். அவர் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார் என்பதுதான் அந்தக்காரணமாம். படத்தின் வேலைகளைப் பொறுத்து தன்னுடைய சம்பளத்தில் ஐம்பதுஇலட்சித்திலிருந்து ஒருகோடிவரை குறைத்துக்கொள்ள அவர் முன்வந்ததே அவருக்கு வரிசையாகப் படங்கள் கிடைக்கக் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மைதானா?
சர்வதேசத் திரைப்படவிழாவுக்குப் போகும் இன்னொரு தமிழ்ப் படம்!
அரவிந்த் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் தமிழ்ப் படம் “கர்மா”. இப்படம் ஹாலிவுட்டின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இப்படம் த்ரில்லர் கதையம்சமுள்ளது. இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறவிருக்கும் “ ஹாலிவுட் ஸ்கை” திரைப்பட விழாவில்
திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முன்னர், கேரளாவில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் முதன்முறையாகத் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அமெரிக்காவிலும் திரையிடப்படவிருக்கிறது.
Actor @dhanushkraja has donated Rupees #5lakhs Cheque for Chief Ministers relief fund through #nadigarsangam today
https://pbs.twimg.com/media/CU6kvB-U8AAb0nC.jpg
SPI Cinemas @SPIcinemas The newest addition to the SPI Family is now open! To book tickets at Palazzo.....
https://pbs.twimg.com/profile_images...pk4_bigger.jpg Premgi amaren @Premgiamaren 2h2 hours ago
ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபம்- ( கோடம்பாக்கம் ) மழையால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
Actor @superstarrajini donates Rs 10 lakhs to flood relief in Tamilnadu through #NadigarSangam
https://pbs.twimg.com/media/CVIhNG7UwAAxmgP.jpg
வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது
http://tamil.filmibeat.com/img/2015/...ddingphoto.jpg
திருவனந்தபுரம்: சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவித்து மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த நடிகை சந்தியாவின் திருமணம் ஒருவழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காதல் படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனவர் நடிகை சந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் சந்தியாவுக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்தது. சந்தியா சென்னையில் உள்ள வீட்டில் சிக்கிக் கொண்டார். வெள்ளத்தால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. சந்தியாவின் குடும்பத்தாரால் மாப்பிள்ளை வீட்டாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தான் அவர்களின் செல்போன் வேலை செய்து மாப்பிள்ளை வீ்ட்டாரை தொடர்பு கொண்டு திருமணத்தை கேரளாவில் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதயடுத்து கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் சந்தியா, வெங்கட் திருமணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் நிலைமை சரியான பிறகு திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.