|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
new serial/program
| Topic started by aanaa on Thu Mar 1 12:08:14 2007. | [Full View] |
| From: aanaa on Wed Nov 11 20:26:18 2009. | [Full View] |
| Quote: |
| "நாகவல்லி'யில் வில்லன் நடிகர்!
வில்லத்தனங்களில் கலக்கும் பெரிய திரை நடிகர் பொன்னம்பலம், சின்னத்திரை தொடர் ஒன்றில் முதன் முறையாக நடிக்க இருக்கிறார். தொடரின் பெயர் "நாகவல்லி'. இதில் அவர் ரக்தபீஜன் பாத்திரத்தில் நடிக்கிறார். தொடரில் நடிப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ""நிறைய சின்னத்திரை வாய்ப்புகள் வந்தது. அந்தத் தொடர்களின் பாத்திரப் படைப்பு பிடிக்காததால் மறுத்து வந்தேன். இந்தத் தொடரின் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். இந்தத் தொடர்தான் நான் நடிக்கும் முதலும், கடைசியுமான தொடராக இருக்கும் என நினைக்கிறேன். காரணம், தற்போது "இடியுடன் கூடிய மழை' என்கிற படத்தை இயக்கி, தயாரிக்கிறேன். "நாகவல்லி' தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. என் மகன் கூட ஞாயிற்றுக்கிழமை ஆனால், இந்தத் தொடரை பார்த்துவிட்டுத்தான் தூங்குவான். சின்னத்திரையில் நடிப்பது மிகவும் திருப்தியாக இருக்கிறது'' என்றார். இந்தத் தொடரில் காளிதாஸ், மோனாலிஸô, நித்தியா, அம்மு, வினோதினி, நேசன், விஜயகணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். பரபரப்பான சம்பவங்களை, விறுவிறுப்பான காட்சிகளாக்கி தொடரை இயக்கி வருபவர் பி.எஸ்.தரண். ஒவ்வொரு ஞாயிறும் 9.30 மணிக்கு, சன்.டிவி.யில் ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை டிரேட் சேனல் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பில், யு.டி.வி. நிறுவனம் தயாரிக்கின்றது. |
| From: aanaa on Fri Nov 13 19:39:39 2009. | [Full View] |
| Quote: |
|
`கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்' `கனா காணும் காலங்கள்' தொடரின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் டிவியில் தொடங்கப்பட்ட புதிய தொடர் `கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்'. இயற்கை மாறாத அழகுடன் மதுரையை அடுத்துள்ள தேனியின் அடர்ந்த மலைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண்முன் நிறுத்துகிறது, தொடர். தேனியில் குமரகுருபரர் பள்ளிக்கும், காரியாப்பட்டி பள்ளிக்கும் பல வருடங்களாக தொடர்ந்து வரும் ஊர்ப்பகை எவ்வாறு மாணவர்களையும் பாதிக்கிறது என்பதை சொல்லும் கதை. காரியாப்பட்டி பள்ளியில் பத்தாம் வகுப்புவரைதான் உள்ளது. மேற்கொண்டு படிப்பைத் தொடர பதினொன்றாம் வகுப்பிற்கும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் சேர காரியாப்பட்டியில் பள்ளிக்கூடம் இல்லாததால் அந்த மாணவர்கள் தேனியில் உள்ள குமரகுருபரர் பள்ளியில் சேர முற்படுகின்றனர். ஆனால் ஊர்பகையை காரணம் காட்டி காரியாப்பட்டி மாணவர்களுக்கு அனுமதி மறுக்கிறது தேனி குமரகுருபரர் பள்ளிக்கூடம். ஆனாலும் நல்ல உள்ளம் படைத்த ஒரு தலைமை ஆசிரியரின் உதவியுடன் அனுமதி கிடைக்கிறது. அந்தப் பள்ளியின் முதல்வரான பாலகுமாரன், `கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார். காரியாப்பட்டி மாணவர்களுக்கும் குமரகுருபரர் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்படி செய்கிறார். சக்தி கணேஷ், அழகப்பன், மச்சக்காளை, வெள்ளை பாண்டி, காமராசு, தெய்வானை, மாரி மற்றும் தங்கம் ஆகிய காரியாப்பட்டி மாணவர்கள் அவர் மூலம் குமரகுருபரர் பள்ளிக்கு இடம் பெயர்கிறார்கள். இதற்கிடையே காரியாப்பட்டி ஊர்மக்களுக்கும் தேனி குமரகுருபரர் பள்ளிக்கும் இடையே இருந்து வந்த ஒரு வழக்கு நீண்டு தீராத பகை ஒன்று உருவாகியிருக்கிறது. சின்ன பிரச்சினை வாக்குவாதத்தில் முற்றி அடிதடியாகி சக்தியின் தந்தைக்கும் குமரகுருபரர் பள்ளி மாணவனின் தந்தைக்கும் நடக்கும் கைகலப்பில், குமரகுரூபரர் பள்ளி மாணவனின் தந்தை உயிரிழக்கிறார். இந்தப்பிரச்சினையின் விளைவாக சக்தியை கண்டாலே குமரகுருபரர் பள்ளி மாணவர்களுக்கு வெறுப்பும், கோபமும் கொப்பளிக்கிறது இதனால் சக்தியின் தாய் மகனை பள்ளிக்கு அனுப்பவே அஞ்சுகிறார். தேனி நகரத்து மாணவர்கள் வெறுப்பிற்கு ஆளான காரியாப்பட்டி மாணவர்கள் அதை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது மீதிக்கதை! சக்தி தனது நண்பர்களோடு சேர்ந்து பள்ளிக்கு செல்வானா, மாட்டானா? இது போன்ற பல திருப்புமுனைகளுடன் நட்பையும் இழைத்து உருவாக்கப்பட்டதுதான் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. |
| From: aanaa on Fri Nov 13 19:40:52 2009. | [Full View] |
| Quote: |
|
ஓடி விளையாடு பாப்பா கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ``ஓடி விளையாடு பாப்பா'' நடனப்போட்டி நிகழ்ச்சி, சிறுவர்-சிறுமிகளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. குறிப்பாக 8 வயது முதல் 13 வயதுள்ளவர்கள் இந்த நடனப் போட்டியில் கலந்து கொள்ளலாம். டான்ஸ் மாஸ்டர் கலா இயக்கும் இந்த நடன போட்டி நிகழ்ச்சியின் நடுவர்கள்: நடன இயக்குநர் பிரசன்னா, `நான் கடவுள்' நடிகை பூஜா. நிகழ்ச்சியை ஸ்ரீராம் என்ற சிறுவனும் கிரித்திகா என்ற சிறுமியும் தொகுத்து வழங்குகிறார்கள். இவர்களும், தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்தவர்கள் என்பது குறிப்டத்தக்கது. இப்போது 54-வது எபிசோடைத் தொட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து பாகம்-2 விரைவில் துவங்க உள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. 8 வயது முதல் 13 வயதுள்ளவர்கள் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். |
| From: aanaa on Fri Nov 13 19:41:46 2009. | [Full View] |
| Quote: |
|
சின்னத்திரை சீரியல் விருது! சென்னை காமராஜர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு `சின்னத்திரை சீரியல் விருது' விழா நடக்கிறது. 2008-ல் ஒளிபரப்பப்பட்ட தொடர்களில் இருந்து 16 தொடர்களை தேர்வு செய்து, அதில் பல்வேறு துறையில் தேர்ந்தவர்களுக்கு விருது வழங்குகிறார்கள். திரைப்பட இயக்குனர் எழில், இயக்குனர்-வசனகர்த்தா ஈ.ராமதாஸ், ஒளிப்பதிவாளர் ரவீந்தர், இசையமைப்பாளர் சிற்பி, பாடலாசிரியர் காமகோடியான், நடன இயக்குனர் `காதல்' கந்தாஸ், எடிட்டர் விட்டல் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த நடிப்புக்கலைஞர்கள், தொழில்நுட்பக்கலைஞர்களை தேர்வு செய்தனர். அதன்படி சிறந்த நடிகர்-நடிகை, சிறந்த குணச்சித்திர நடிகர்-நடிகை, சிறந்த வில்லன் நடிகர்-வில்லி நடிகை, சிறந்த புதுமுக நடிகர்- நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை, சிறந்த இயக்குனர் ஆகியோர் விருது பெறுகிறார்கள். சிறந்த முகப்புப் பாடல், சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடன இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த கதை-திரைக்கதை- வசனகர்த்தாவும் விருதுப் பட்டியலில் இணைகிறார்கள். சிறந்த தயாரிப்பு நிறுவனத்துக்கும் விருது உண்டு. விழாவில் `வாழ்நாள் சாதனையாளர் விருது' பழம்பெரும் நடிகை எஸ்.என்.லட்சுமிக்கு வழங்கப்படுகிறது. விஷன்புரோ ஈவென்ட் மேனேஜ்மென்ட் அமைப்பு, காஸ்மிக் டவுன் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் இந்த விருது நிகழ்ச்சி, கே டிவியில் வருகிற 22-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 4 பகுதிகளாக ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. |
| From: aanaa on Fri Nov 13 19:42:47 2009. | [Full View] |
| Quote: |
|
ரேவதி தயாரிக்கும் புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் `யாதுமாகி நின்றாய்' என்ற புதிய தொடர், வரும் 23-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை ரேவதி தயாரிக்கும் இந்த தொடரில் ஸ்வர்ணமாலயா, நீரஜா மற்றும் ஸ்ரீரேகா நடிக்கிறார்கள். ரேவதியும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடை வெளிக்குப் பிறகு ரேவதியின் சின்னத்திரை பிரவேசம் இது. திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, தொடர். |
| From: aanaa on Fri Nov 13 19:43:28 2009. | [Full View] |
| Quote: |
|
உறவுக்கு கை கொடுப்போம் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர், உறவுக்கு கைகொடுப்போம். ஏவி.எம். நிறுவனம் தயாரித்து வழங்கும் இந்த தொடரை கே.ஏ.புவனேஷ் இயக்குகிறார். சேக்கிழார் திரைக்கதை வசனம் எழுத, சின்னத்திரை நட்சத்திரங்கள் ``பூவிலங்கு மோகன்'', கண்ணன், ராஜ்குமார், விஜய் ஆனந்த் புஷ்பலதா, அஞ்சலிதேவி, காஞ்சி இனிதா, லஷ்மி மற்றும் சீதா நடிக்கிறார்கள். அப்பாவாக இருந்து தம்பிகளை வளர்க்கும் ஒரு அண்ணனின் கதை இது என்று ஒரு வரியில் கூறிவிட்டாலும், அண்ணன்மார்கள் அனுபவிக்கும் வலியை, ஒவ்வொரு எபிசோட்டிலும் இழைத்து, இழைத்து செதுக்கி இருக்கிறார் இயக்குநர். |
| From: aanaa on Fri Nov 13 19:44:33 2009. | [Full View] |
| Quote: |
|
வியக்க வைத்த `தாண்டவன்' கலைஞர் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகும் `தங்கமான புருஷன்' தொடரில் வரும் தாண்டவன் பாத்திரம், ரசிகர்கள் மத்தியில் `யார் இவர்' என்று கேட்க வைத்திருக்கிறது. அதற்கு காரணம் அந்த பாத்திர படைப்பும் கேரக்டராகவே மாறிவிட்ட வெங்கட் நடிப்பும்! ஆரம்பத்தில் இரண்டு நாள் படப்பிடிப்பு என்று அழைத்து வெங்கட்டை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் கே.விஜயன். அது ஒரு சாமியார் வேடம் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று அவரை பயன்படுத்தியிருக்கிறார். அதோடு அவரது போர்ஷன் முடிந்து விட்டது. இதற்கிடையே ஒரு விழாவுக்கு சென்ற கதாசிரியர் `அன்னக்கிளி' செல்வராஜ் பார்வையில் பட்டார், வெங்கட். `இவரது நிஜ தோற்றம் நேரில் பார்க்கும் போது இன்னும் வித்தியாசமாக இருக்கிறதே என்று வியந்தவர், வீட்டுக்கு சென்றதும் அவருக்கென ஒரு பிளாஷ்பேக் கதையை உருவாக்கி அவரது பாத்திரத்தை இன்னும் பலமுள்ளதாக மாற்றி விட்டார். ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் `மாமன் ஏழு மலைக்கு மருமகன் கையால் சாவு' என்று ஜோதிடர் சொல்ல, அங்கிருந்து வெளியேறி சாமியாராக வலம் வந்த ஏழுமலை, இப்போது தாண்டவன் என்கிற பெரிய போலி சாமியாராக வலம் வருகிறார். இந்த வார எபிசோடுகளில் மாமனும், மருமகனும் சந்திப்பதும், அதனால் அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றமும் தொடரை தொற்றிக்கொள்ளும் என்கிறார், இயக்குனர் சுந்தர் கே.விஜயன். ![]() |
| From: aanaa on Thu Nov 19 21:19:41 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:21:27 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:24:00 2009. | [Full View] |