Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

kadaisiyaaga ore oru tharam

Topic started by sivank on Mon Jul 20 14:12:58 2009. [Full View]

கடைசியாக ஒரே ஒரு தரம்

நங்கநல்லூர், சென்னை

அடுப்பில் ரயில் கட்டடம் போட்டு கொண்டிருந்த மைதிலியின் காதில், "மாமா போங்கு அடிக்காதீங்க மாமா, ப்ளம் எல்.பி., மிடில் ஸ்டம்ப்" என்று பக்கத்து வீட்டு வாண்டுகள் கத்துவதும் அதற்கு ராகவன் சிரித்து கொண்டே சால்ஜாப்பு சொல்வதும் கேட்டது. எதிரே காப்பி குடித்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பங்கஜம்," நன்னா இருக்குடி உங்க ஆத்துக்காரர் அடிக்கிற கூத்து. சின்ன பசங்களுக்கு சரி சமமா விளையாடிண்டு, ஆமா அடுத்த மாசம் தானே ரிட்டையர் ஆறார்"? என்றாள்.

"ஆமாம் மாமி, அடுத்த மாசத்லேந்து இவர எப்படி சமாளிக்க போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு. குட்டி போட்ட பூனை மாதிரி வீட்டுக்குள்ளயே சுத்தி சுத்தி வருவார். விட்டா சமைக்கறேன் பேர்வழினு கிச்சனை ஒரு வழி ஆக்கிடுவார். சமையல் என்னமோ நன்னாத்தான் இருக்கும், ஆனா அப்புறம் அடுக்களைய ஒழிக்கறத்துக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆயிடும். ஆர்மில பெரிய ஆபிஸர்ன்னு நெனச்சு எங்கப்பா இவருக்கு கல்யாணம் பண்ணி வச்சா, அப்புறம் தான் தெரிஞ்சது இவர் ஆர்மில குக்கா இருந்து இருக்கார்ன்னு, இந்த அழகுல இவர 2 வருஷம் லண்டனுக்கு வேற அனுப்பினா, இது அங்க போய் என்ன சமைச்சுதோ தெரில, வந்த உடனே ஆர்மி வேலைய விட்டுட்டு, மெட்ராஸ்லயே ஒரு கவர்ன்மென்ட் வேலைல சேர்ந்துட்டார். பெரிய வேலைல்லாம் ஒன்னும் இல்ல, ஊர் ஊரா போய் ப்ரசார நாடகம் போடனும். அதுவும் தமிழ்ல போட்டா தான் பரவாயில்லயே, டிராமா ஹிந்தில. அப்பபோ பீகார், குஜராத்னு போய்டுவார். எங்க சுந்து பொறந்தபோது கூட அவர் பக்கத்துல இல்ல, காஸியாபாத் போய்ட்டார், போன் பண்ண கூட வசதி இல்லாத ஊராம்,அவர் ஆபிஸ் ப்ரெண்டு ராஜகோபாலன் தான் வந்து கவனிச்சுண்டார். எங்கப்பாவுக்கு ரொம்ப கோவம், அவர் வந்தப்புறம் பெருசா சத்தம் போட்டார். இவரோ வழக்கம் போல சிரிச்சுண்டே சமாளிச்சுட்டார்".

"அப்போ, நாம எல்லாரும் சேர்ந்து ஒரு அறுபடைவீடு டூர் போலாமா, எங்காத்து மாமாவுக்கு தெரிஞ்ச டிராவல்ஸ்ல சொல்லி ஒரு மினி பஸ் ஏற்பாடு பண்ணிடலாம், என்ன சொல்ற?"

"பாக்கலாம் மாமி, அவர் ரிட்டயர் ஆனதுக்கப்றம் சுந்துவ பாக்க போலாம்னு ஒரு ஐடியா வச்சு இருக்கேன், இந்தாங்கோ சூடா ரெண்டு ரயில் கட்டடம் சாப்டுங்கோ," என்ற போது டெலிபோன் மணி அடித்தது.

***********************************************************

கிண்டி, சென்னை

கத்திப்பாரா ஜங்ஷனுக்கு பக்கத்தில் ஒரு உள்வாங்கிய தெருவில் இருக்கும் ஒரு பழுப்பு நிற கட்டிடத்தை பார்த்தாலே அது அரசாங்கத்தை சேர்ந்தது என சொல்லி விடலாம். அக்கம்பக்கத்தில் இருக்கும் இரைச்சல்களையும், அவசரத்தையும் வாங்கி கொள்ளாமல் அமைதியாக காட்சி அளிக்கும் மத்திய அரசின் தகவல் தொலிபரப்பு நிலையத்தின் முன் ஆட்டோவில் இருந்து இறங்கிய ராகவன் மெயின் ஆபிஸில் நுழையாமல் கட்டிடத்தின் பின்னே இருக்கும் சிறிய கட்டிடங்களை நோக்கி சென்றார். மிகவும் புராதனமாக காட்சியளித்த அந்த கட்டிடம் தான் அவரது ஆபிஸ். ரிசப்ஷனில் அவரை பார்த்த தேசிகன்," உன்னையும் கூப்டுட்டாளா?" என்றபடியே கையை நீட்டினான். கை குலுக்கிய பின் இருவரும் சற்று பின்னால் இருந்த லிஃப்டை நோக்கி சென்றனர்.

லிஃப்ட் அவர்களை 3 அடுக்கு கீழே உள்ள ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஆப்பரேஷன் சென்டருக்கு(special force op. center) முன் கொண்டு நிறுத்தியது. கதவை ரெட்டினா ஸ்கானர்(retina scanner) மூலமாக திறந்து உள்ளே போனவர்களை முறைத்த கௌரி,"என்ன சார், இவ்ளோ லேடா வர்ரீங்க, உள்ள எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க," என்றாள். கிரைஸிஸ் மேனேஜ்மென்ட் சென்டர்(crisis management center) கதவை மெல்ல தட்டி விட்டு நுழைந்த ராகவனை சுட்டெரிப்பது போல பார்த்தார் வைஸ் அட்மிரல் ராஜகோபாலன்.

"ஜென்டில்மேன், மேஜர் ராகவனும் வந்தாச்சு, இனிமே பிரீஃபிங்கை ஆரம்பிக்கலாமா?"

அந்த செவ்வக அறையில் இருந்த எல்லோருமே கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தனர். நேவல் இன்டலிஜென்ஸ்(Naval Intelligence) குல்கர்னி பைப்பை பற்ற வைக்காமல் கடித்து கொண்டிருந்தார். ரா(RAAW) வின் சீதாராமையா, ஐ.பி(Intelligence Buereau) யின் மல்ஹோத்ராவுடன் பேசி கொண்டிருந்தார். டிஃபென்ஸ் அண்டர் செக்ரடரி நாராயணன் எம்.ஸி.எஃப் (Marine Commando Force)வாசுதேவனுடன் ரகசியம் பேசி கொண்டு இருந்தார். கையில் ஒரு டிடெக்டரை வைத்து ஒட்டு கேட்கும் கருவிகளை தேடியவர் அறையை விட்டு வெளியேறியதும், பேனாவால் கிளாஸை தட்டிய ராஜகோபாலன்," ஜென்டில்மேன், மிஸ்டர் மல்ஹோத்ரா சொல்றத கேக்கலாம்" என்றார்.

பக்கத்தில் வைத்திருந்த ஃபைல்களை எல்லோரிடமும் பிரித்து கொடுத்த மல்ஹோத்ரா,"ஜென்டில்மென், ஐ.பி.க்கு இரு ரகசிய தகவல் வந்து இருக்கு. கடந்த சில நாட்களாகவே ச்ந்தேகத்துக்குரிய மீன் பிடி படகுகள் கராச்சியில் இருந்தும், ஏமனில் இருந்தும் மாலத்தீவிற்கு வந்து போய் கொண்டு இருக்கிறது. தீவிரவாதிகள் மாலதீவில் உள்ள ஆளற்ற தீவுகளில் மறைந்து இருப்பதாக எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கிறது. சுனாமி வந்த பிறகு இரவோடு இரவாக இரண்டு பாக். போர்கப்பல்கள் வந்து தண்ணீரில் எதையோ அள்ளி கொண்டு வேகமாக சென்றதை சாட்டிலைட் மூலமாக பார்த்த பிறகு அந்த சந்தேகம் வலுத்தது. நேற்று, பிற்பகல் 3 மணி அளவில் ஒரு செல் போன் பேச்சை இன்டெர்செப்ட் செய்து பரிசோதித்ததில், அந்த குரல் பிரபல தீவிரவாதி இப்ராஹீம் தாவூத் குரல் எஅன் உறுதி படுத்த பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த பேச்சு நடந்த இடம் மாலத்தீவின் வட கோடியில் உள்ள அலிஃபுஷி(Alifushi) தீவில்.

"ஆர் யூ ஷ்யூர், அது இப்ராஹீம் தாவூத் குரல் தானா," என்றார் டிபென்ஸ் நாராயணன்.

"கண்டிப்பா சார், உடனே சீதாராமையாவ கன்ஸல்ட் பண்ணி வாய்ஸ் மேட்ச் பார்த்தோம், ரிசல்ட் 100% பாஸிட்டிவா இருக்கு".

"சரி, அவன் யார் கூட பேசிட்டு இருந்தான்,அதை ட்ரேஸ் பண்ண முடிந்ததா?"

"சொன்னா நம்ப மாட்டிங்க, அவன் பேசிட்டு இருந்தது ஹோஷியார் கான் கிட்ட. சாட்டிலைட் போன்ல தான் பேசிட்டு இருந்தாங்க. ஆனா, ஒரு புது அல்கோரிதம் மூலமா எல் இன்ட்(ELINT- Electronic Intelligence) அத இன்டர்செப்ட் பண்ணி டிகோடும் பண்ணிட்டாங்க".

"வெரி குட், இவ்ளோ நாளா ஒளிஞ்சுட்டு இருந்த நரி மெதுவா வளைய விட்டு வெளிய வந்திருக்கு, அதுவும் லாஸ்ட் இயர் டெல்லி இன்ஸிடென்டுக்கு அப்புறம் இப்ப தான் முதல் தடவையா இவங்க ரெண்டு பேரும் தான் அதுக்கு காரணம்னு ப்ரூவ் ஆகி இருக்கு."

"பட், ஒய் மால்டிவ்ஸ்? அவங்க கவர்ன்மென்ட்டும் இவங்கள சப்போர்ட் பண்ணுதா?"

இதுவரை பேசாதிருந்த சீதாராமையா யோசனையுடன்," அப்படி ஒரு சம்பந்தம் இருக்கற மாதிரி தெரியல. இப்போ இருக்கிற பிரெஸிடென்ட் ரொம்ப நல்லவரா தெரியறார். மக்களுக்கு நிறைய பண்ணனும், நாட்டை முன்னேத்தணும்னு குறியா இருக்கார். ஆனா, பழம்பெருச்சாளிகள் சிலபேர் அவருக்கு எதிரா நிறைய உள்வேலைகள் செய்யறாங்க. இது அவருக்கு தெரியாம நடக்கற வேலைனு தான் நாங்க நம்பறோம்".

சேரை விட்டு எழுந்த நேவல் இன்டலிஜென்ஸ் குல்கர்னி பீமரில்(Beamer) உலக வரைபடத்தை போட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிதாக்கினார். "இங்க பாத்தீங்கனா உங்களுக்கே நல்லா புரியும். இது தான் பெர்ஷியன் கல்ஃப், அராபியன் ஸீ, நம்ம வெஸ்ட்கோஸ்ட். இந்த முக்கோணத்துக்கு நடுவுல இருக்கறது மாலத்தீவுகள். இங்க இருந்து ஸ்ரீலங்காவுக்க்கோ, அரபு நாடுகளுக்கோ சுலபமா போகலாம். கொஞ்சம் தொலைவா இருந்தாலும் ஒரு நல்ல பெரிய வேகமான போட் கராச்சிலேந்து வந்துட்டு போகலாம். இதனாலதான் இந்த வடகிழக்கு ஏரியாவ நாம பலமா காவல் காக்க வேண்டி இருக்கு. நம்ம லட்ச தீவ சேர்ந்த மினிக்காய்(Minicoy) தீவுக்கும் அவங்க திலந்துமதி(Thilandhumathi) தீவுக்கும் 58 கி.மீ தூரம் தான். இப்போ நாம கேட்ட அலிஃபுஷி தீவு இன்னும் ஒரு 100 கி.மீ தள்ளி உள்ள இருக்கு. அக்கம் பக்கதுல வேற எந்த தீவும் கிடையாது. ஆனா, அந்த தீவ அடையறது ரொம்ப கஷ்டம். தீவ சுத்தி ரொம்ப தூரத்துக்கு கத்தி மாதிரி கூரான பவழ பாறைகள் இருக்கு. அலைகளோட வேகமும் ஜாஸ்தி, ஆழமும் ஜாஸ்தி. சின்ன படகுகள் தான் போகமுடியும் அதுவும் ரொம்ப ஜாக்கிரதையா மெதுவா அலைவேகம் கம்மியா இருக்கும் போதுதான். அதனாலதான் அது ஆள் நடமாட்டம் இல்லாத தீவா இருக்கு. இப்போ இவங்க வந்து தங்க அது வசதியா போச்சு."

"அதெல்லாம் சரி, இந்த இன்ஃபர்மேஷன வச்சு நாம் என்ன பண்ண போறோம். நாம வருஷகணக்கா தேடிட்டு இருந்த ஒரு ஆள், இத்தனை நாளா ஒளிஞ்சிட்டு இருந்த ஆள இப்போ முதல் தடவையா ட்ரேஸ் பண்ணி இருக்கோம். வாட் ஆர் அவர் ஆப்ஷன்ஸ்?" என்றார் வாசுதேவன்.

கண்ணாடியை கழட்டி வேகமாக கர்சீப்பால் துடைத்த நாராயணன்," நம்ம புது கவர்ன்மென்ட் இத காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிட பார்க்குது. இந்த மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போ கிடைக்கும்னு தெரியாததனால இதை சீக்கிரம் நடத்தியாகனும். அதே சமயம் இது நம்ம வேலைன்னும் தெரிய கூடாது. ஆப்பரேஷன் காக்டஸ்(Operation Cactus) மாதிரி இதை பகிரங்கமா செய்ய முடியாது. நாம நேவியையோ, மரைன்ஸையே அனுப்ப முடியாது. அனுப்பினா இன்டர்னேஷனல் ப்ராப்ளம் ஆயிடும். அட்மிரல் ராஜகோபாலனோட ஸ்பெஷல் ஃபோர்ஸ் தான் இதுக்கு சரியான யூனிட்".

தொண்டையை லேசாக செருமிக்கொண்ட ராஜகோபாலன்,"ராகவன், கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுப்பா", என்றார். ராகவன் வெளியே சென்றவுடன் மற்றவர்களை நோக்கி," ஜென்டில்மென், என்னை பொறுத்தவரை இந்த ஆப்பரேஷனுக்கு தகுந்த ஆள் மேஜர் ராகவன் தான். இவர் இந்த மாதிரி எத்தனையோ ஆப்பரேஷன்ஸ வெற்றிகரமா முடிச்சு இருக்காரு. இன்ஃபாக்ட், 1988 ஆப்பரேஷன் காக்டஸ் சமயத்துல மாலத்தீவுலேயே பல மாசம் தங்கி அவங்கள மாதிரியே திவேஹி(Dhivehi) பேசக்கூடியவர். ஆனா, இவர் இன்னும் 3 வாரத்துல ரிட்டயர் ஆகப்போறார். இந்த சமயத்துல இவர இந்த ப்ராஜக்ட்ல அனுப்ப எனக்கு மனசு வரல்ல. ஒரு புது டீம் தயார் பண்ண எனக்கு கொஞ்சம் டயம் வேணும்" என்றார்.

வைஸ் அட்மிரல் ராஜகோபாலன் அறை, கிண்டி, சென்னை

"ராகவா, நான் எவ்ளோவோ சொல்லி பார்த்துட்டேன், புது டீம் தயார் பண்ண டயம் இல்லைனு சொல்றா. எனக்கும் அது சரின்னுதான் தோன்றது. நீ தான் அந்த காரியத்துக்கு சரியான ஆள். கௌரி இப்போ உன்னோட பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணின்டு இருக்கா. உனக்கு என் மேலே கோவம் இல்லயே".

லேசாக சிரித்த ராகவன், " எனக்கு என்னவோ நீங்க எல்லோரும் கொஞ்சம் அவசரபடற மாதிரி தோண்றது. அட்மிரல், உங்களுக்கே தெரியும் இந்த மாதிரி காரியத்துல அவசரபட்டோம்னா என்ன ஆகும்ன்னு. நான் ஃபீல்டு ஒர்க் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு. என்ன போய் இந்த சென்ஸிபிள் ஒர்க்ல அதுவும் இவ்ளோ அவசர அவசரமா இன்வால்வ் பண்றது தான் புரியல. நான் இன்னும் 3 வாரத்துல ரிட்டயர் ஆகப்போறேன், இப்போ இந்த அஸைன்மென்ட். யாரோ இதை பத்தி நல்லா யோசிச்சு இருக்காங்கன்னு தெரியுது."

"அப்படி இல்ல ராகவன், இந்த அஸைன்மென்ட்ல நிறையா பேருக்கு இடம் இல்ல. இதை நீ மட்டும் தனியா பண்ண போற. மொதல்ல, நீ இன்னிலேந்து ரிட்டயர் ஆற. உனக்கும் நம்ம கவர்ன்மென்டுக்கும் இன்னிலேந்து எந்த சம்மந்தமும் இல்ல. இதனால, நீ நம்ம வழக்கமான கான்டாக்ட்ஸ் யாரயும் யூஸ் பண்ண முடியாது. இல்ல இல்ல அப்படி பாக்காதே, அஃபீஷியலா யாரையும் யூஸ் பண்ண முடியாதுனு தான் சொன்னேன். உனக்கு உதவி செய்ய ஒரு சரியான ஆள் இருக்கு. இது யாருக்குமே தெரியாம நான் வச்சு இருக்குற ஏஜென்ட். பேரு நாராயணி, அப்பாவோட சொந்த ஊரு மன்னார்குடி, அம்மா சேலம். பொறந்து வளர்ந்து படிச்சது எல்லாம் சென்னைல. என்.ஸி.ஸி ல இருக்கும் போது ஒரு ஷூட்டிங் போட்டில என் கவனதுக்கு வந்தா. இந்தியன் ஒலிம்பிக் ஷூட்டிங் டீம்ல சேர்ந்து சிட்னி போய் சில்வர் மெடல் வாங்கினவ. இவ தான் உனக்கு இந்த ஆப்பரேஷன்ல கான்டாக்டா இருக்க போறது. உனக்கு என்ன வெப்பன்ஸ் தேவையோ அதை எனகு சொல்லு, அவ உனக்கு அஹ்டை ஏற்பாடு பண்ணி கொடுப்பா. இந்த ஃபைல்ல எல்லா இன்ஃபர்மேஷனும் இருக்கு, நல்லா ஸ்டடி பண்ணி ஒரு பிளான் இன்னிக்கு ஈவினிங்குள்ளே சொல்லு. மீதி எல்லாம் நான் ஏற்பாடு செய்யறேன்."



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum