|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Kalyanam
| Topic started by R.Latha on Tue Apr 28 3:40:50 2009. | [Full View] |
| From: R.Latha on Tue May 19 2:47:35 2009. | [Full View] |
| From: R.Latha on Mon May 25 3:00:09 2009. | [Full View] |
| From: R.Latha on Mon May 25 3:00:38 2009. | [Full View] |
| From: aanaa on Sat Jul 11 22:40:23 2009. | [Full View] |
| Quote: |
|
துப்பறியும் மீனா திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கல்யாணம். நடிகை மீனா இரட்டைவேடத்தில் நடிக்கும் இந்த தொடர் எதிர்பார்ப்புக்குரியதாகி இருக்கிறது. மத்தியமந்திரியின் கொலைக்கு மீரா-ரஞ்சன் இருவரும் காரணமாகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு மாயாவதி கொலையாளியை தேடும் வேட்டையை தீவிரமாக்குகிறார்.அதில் மீரா பற்றிய தகவல் கிடைத்து புலன் விசாரணையை தொடரும்போது மீராவுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது அவள்தோழி ஆர்த்தி எனத்தெரிகிறது. ஆனால் போலீஸ் வளையத்திற்குள் வரும்முன்னே ஆர்த்தி மரணத்தை தழுவி விடுகிறாள். இந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருந்து மீராவைப் போன்றே தோற்றம் கொண்ட ஜேர்னலிஸ்ட் சுஜாதா ஊருக்கு வருகிறாள். தன் உயிர்த்தோழி ஆர்த்தியின் கொடூர மரணம் அவளைப் பாதித்ததில் இந்த திடீர் வரவு. கொலையாளி மீராவுக்கு அடைக்கலம் கொடுத்ததாக போலீஸ் ஆர்த்தியின் குடும்பத்தை பந்தாடுகிறது. ஆர்த்தியின் அப்பாவை ஜெயிலில் அடைக்கிறது. அம்மாவோ அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்படுகிறார். பத்திரிகைத்துறையில் பணியாற்றும் சுஜாதா தன் பாணியில் துப்புதுலக்கி ஆர்த்தியின் காதலன் கணேஷை கண்டுபிடிக்கிறாள்.அவன் வீட்டுக்குப் போனவள் `நான்தான் கணேஷின் சிங்கப்பூர் காதலி' என்ற பொய்யை அவிழ்த்து விடுகிறாள். கணேஷின் பெற்றோர் இதை நம்பிவிட, கணேஷ் தான்அதிர்ந்துபோகிறான். கொலையாளி மீராவை ஆர்த்தி வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தது கணேஷ்தான் என்று தெரிய வருகிறது. அதனால் ஆர்த்தியின் திடீர் மரணத்திற்கு கணேஷ் தான் காரணம் என சுஜாதா நினைக்கிறாள். அதையே கணேஷிடமும் கேட்கிறாள். அவனோ அதை மறுக்கிறான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை உணர்ந்து அப்போதைக்கு அமைதியாகி விடுகிறாள் சுஜாதா. இந்நிலையில் கணேஷ்- சுஜாதா திருமணத்துக்கு கணேஷின் பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்கள்.இந்த நேரத்தில் ஆர்த்தி குடும்பத்துடன் மீரா இருப்பது போன்ற ஒரு புகைப்படம் போலீஸ் சூப்பிரண்டு மாயாவதி கையில் கிடைக்கிறது. கொலையாளி மீராவைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் இருக்கும் சுஜாதாவை போலீஸ் மீராவாக கருதி கைது செய்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து சுஜாதாவால் மீண்டு வர முடிகிறதா? மீரா இறந்திருந்தால் சுஜாதாவின் நிலை என்னவாகும்? நடக்கவிருந்த அவள் கல்யாணம் அவ்வளவுதானா? இப்பமடி பரபரவென்று நகரும் காட்சிகள் தொடரை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. மீரா-சுஜாதா என இரண்டு கேரக்டர்களிலும் நடிகை மீனா வேறுபடுத்திக்காட்டும் வித்தியாசங்களும் தொடருக்கு பிளஸ்சாகியிருக்கிறது'' என்கிறார், தொடரின் இயக்குனர் விடுதலை. தொடருக்கு திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: திருஞானசுந்தரம். ஒளிப்பதிவு: நாககிருஷ்ணன். இயக்கம்: விடுதலை. |
| From: aanaa on Sat Aug 8 17:46:45 2009. | [Full View] |