Hub Magazine | oPod Top 50 | Latest Discussion

Intro | Using the site | Posting in Tamil | Login Problems? | Contact Us | Hub Policies

The Hub : Stories / kathaigaL Hello Guest, Login to post.

Pallavan Magal

Topic started by sivank on Sat Jun 21 18:06:59 2008. [Full View]

பல்லவன் மகள்

அன்பு நன்பர்களே, புலியை கண்டு பூனை சூடு போட்டு கொள்ளலாமா. இந்த பூனை சூடு போட்டு கொள்ள போகிறது. மனதிற்குள் பல ஆயிரம் கதை இருந்தாலும் எழுத்து வடிவத்தில் வெளி கொணர்வது இதுவே முதல் தடவை. தவறு இருப்பின் மன்னித்து அருள்வது உமது தலயாய கடமை. இனி நாம் நமது கதைக்கு செல்வோம் நம்மை வரவேற்க அரசரும் அரசியரும் தோழியரும் காத்து இருக்கின்றனர். நாம் சற்றே ஆறாம் நூறான்டை நோக்கி பயனப்படுவோம்


ஆதிவராகன் கோவில்

முன்னிறவு வேளையில் கடல் மல்லை சற்றே உறக்க கோலத்தொடு காட்சி அளித்து கொண்டு இருந்தது. வீதிகளிலும் துறைமுகதிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. பெரிய பெரிய பண்டகசாலைகளில் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக காத்து இருந்தது. மல்லையில் அன்று இந்திர விழா கொண்டாடபட்டதால் மக்கள் விரைவாகவே வீடு சென்று விட்டனர் போலும். காஞ்சியில் இருந்து மன்னரும் இளவலும் வந்து சென்றது மக்களுக்கு மன நிறைவை அளித்திருக்க கூடும்.

அந்த முன்னிறவு வேளையில் வெகுதூரம் ஓடி களைத்துவிட்ட தனது குதிரையை விரட்ட மனமில்லாமல் மெதுவாகவே செலுத்தி வந்த அந்த வீரன் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாக பன்டங்களை சுமந்து தொலைவில் நிற்க்கும் கப்பல்களை நோக்கி சென்று கொன்டிருந்தன. சிம்ம விஷ்னு சக்ரவர்த்தியின் காலத்தில் இருந்து சிறிய துறைமுகமாக விளங்கிய மல்லை மகேந்திர சக்ரவர்த்தியின் காலத்திலும் பிறகு நரசிம்ம சக்ரவர்த்தியின் காலத்திலும் தலைமை துறைமுகமாக உருவெடுத்து விட்டது. இலங்கைக்கும் கலிங்கதிற்க்கும் கடல் வாணிபம் பெருத்து விட்டது.

கடற்கரை ஓரமாக தனது குதிரையை செலுத்திய அவ்வீரன் மெதுவாக ஊரை தாண்டி பாறைகளை குடைந்து குகை கோவில்களாக மாற்றபட்ட இடத்தை நோக்கி சென்றான். சற்றே தயக்கதுடன் வெளி வரும் நிலவொளியில் அவனை சிறிது உற்று பார்ப்போம். நடுத்தற வயதினை தாண்டினாலும் கஷ்டமில்லாமல் அவன் குதிரை மீது அமர்ந்து வந்தது அவனது இடைவிடாத உடற்பயிற்ச்சியை நமக்கு உணர்த்தியது.

மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றி சென்று ஆதி வராகன் கோவில் எனப்படும் குகையை அடைந்த அவ்வீரன் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கை நன்கு தூண்டி பிரகாசமாக்கினான். நரசிம்ம சக்ரவர்த்தியால் உருவாக்க பட்ட அக்கோவிலில் நாரயனான ஆதி வராகர் உக்கிரமும் சாந்தமும் கலந்து நோக்கி கொண்டிருந்தார். ஆதி வராகரை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த அவ்வீரனை விளக்கொளியில் உற்று நோக்குவோம். ஆஜானுபாகுவாக இருந்த அவ்வீரனின் அளவோடு சிறுத்த இடுப்பும், பறந்த மார்பும், முதுகும் அவனது உடற்பலத்தினை சற்றே உணர்த்தியது. சற்றே அகற்றி நிற்பதால் அவனது கால்களும் இரும்பினால் செய்யப்பட்டதாகவே தோன்றியது. அதிக சதைபிடிப்பு இல்லாத அவன் தேகமும் இடையில் இருந்த வாளின் மீது வைக்க பட்டிறுந்த நீண்ட கரமும் அவனது வீரத்தை நமக்கு பறைசாற்றின.

விளக்கொளியில் அவனது கூரிய விழிகள் அங்கு ஒரு மூலையில் இருந்த மகேந்திரவர்மரின் சிலையை பார்த்து இருப்பதை கண்டால் அச்சிலை அவனுடன் ஏதோ பேசுவதை போலவே காட்சி அளித்தது. அவன் நின்ற தோரனையும் அடிக்கடி குகை வாயிலை பார்ப்பதையும் கண்டால் யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் என்றே தோன்றும் வேளையில் தூரத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது



AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Responses:


AddThis Social Bookmark Button | RSS Feed | Email me when a reply is posted

Want to post a response?

(Hello Guest, you need to Login to post a response. Are you a New User? Register first.)
Subject: (Optional)

Your response:           Post Emoticons | Tamil TypePad
For Quoting text: use [quote]....[/quote]

Firefox Users: use this extension to post tags without quitting Lite View!

Jump to Full View for more...!


Back to Stories / kathaigaL forum